சியபத பினான்ஸ் பிஎல்சி வாழைச்சேனையில் தனது 50வது கிளையைத் திறந்து வைத்துள்ளது.
முன்னணி உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி தனது 50வது கிளையை வாழைச்சேனையில் அண்மையில் திறந்து வைத்தது. சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. ரஜீவ் டி சில்வா மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர், வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரோஷினி விக்னேஸ்வரன், வாழைச்சேனை உதவி பொலிஸ் சுப்ரின்டன்ட் திரு.ஏ.எல்.எம்.ஜமீல், வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.எஸ்.எம்.ஆர்.பண்டார, வாழைச்சேனை கிராம சேவகர் திரு.கே.சுபாஷ், வாழைச்சேனை சம்பத் வங்கி சிரேஷ்ட முகாமையாளர் திரு.ஏ.என்.டேவிட் நிதர்ஷன், அரச மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் புதிய கிளையின் திறப்பு விழா இடம்பெற்றது.
மீன்பிடி, பெருந்தோட்டம் மற்றும் புடவைக்கைத்தொழில் முதல் சுற்றுலா, விருந்தோம்பல் வரை, வாழைச்சேனை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள்தொகை செறிவாக வாழும் நகரமாக, வணிக ரீதியில் வேகமாக முன்னேறியுள்ளது. இந்த பல்துறை வணிகத் தன்மையும், அப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் வனப்பும், சியபதவை அதன் அதிகபட்ச திறனைக் கண்டறிய உள்ளுர் மக்களுக்கு ஊக்கமளித்துள்ளது.
‘சியபத பினான்ஸ் பிஎல்சி, இன்று தேசத்தின் ஒவ்வொரு மூலையையும் அடைவதற்கான அதன் இலக்கில், குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டியுள்ளது. வாழைச்சேனையில் எமது 50வது கிளை ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், வளர்ந்து வரும் வர்த்தக சமூகத்தினருக்கு எமது முழுமையான நிதிச் சேவைகளை வழங்குவதற்கும், எமது நிறுவனத்தின் நோக்கத்தை மெய்ப்பிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. புதிய சமூகங்களை தொடர்ந்து சென்றடைவது உண்மையிலேயே பலனளிக்கும் அனுபவமாகும், மேலும் இந்த விரிவாக்க முயற்சிகளை எதிர்காலத்திலும் தொடர நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 65% பேர் மாவட்டத்தின் பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். வாழைச்சேனை மக்கள் நிலையான வருமானத்திற்காக பாரம்பரிய கைத்தொழில்களில் முதன்மையாக தங்கியிருக்கும் அதேவேளை, இப்பிரிவின் கணிசமான பகுதியினர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் ஏனைய பகுதி நேர வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடி தொழில் இங்கு வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைச்சேனை ஏரியைத் தவிர, மீன்பிடித் துறைமுகத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் செயற்பாட்டுத் திறன் ஆகியவை சமூகத்தில் பெரும்பான்மையினருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய வருமான ஆதாரங்களில் ஒன்றாக தொழில்துறையை உயர்த்தியுள்ளது. கடந்த தசாப்தத்தில், அமைதியான, ஆழமற்ற கடல்கள், வளமான பல்லுயிர் மற்றும் தனித்துவமான கலாசார நடைமுறைகள் ஆகியவை வாழைச்சேனையை சுற்றுலா வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன, இது வருமானத்தை உருவாக்குவதற்கு மட்டுமல்ல, உள்ளுர் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வழிகளை உருவாக்கியுள்ளது.
நிறுவனம் குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்பு, தங்கக்கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், மற்றும் அதன் தானியங்கி பில் செலுத்தும் வசதியான Smart Pay வரையிலான பரந்த தயாரிப்பு போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.
வாழைச்சேனைக்கு தனது கிளை வலையமைப்பை விரிவுபடுத்தும் அதேவேளை, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட முகாமைத்துவமானது, நாடு தழுவிய சுற்றாடல் பாதுகாப்பை மையமாகக் கொண்ட CSR நிகழ்ச்சியான ‘சியபதென் மிஹிகதட’ திட்டத்தின் முயற்சிகளை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்திற்கு விரிவுபடுத்தியது. மேலும் டிஜிட்டல் கல்வியின் தரத்தை பாடசாலைகளில் மேம்படுத்துவதற்காக கணனி உட்பட்ட உபகரணங்களையும் வழங்கியுள்ளது.
சம்பத் வங்கிக் குழுமத்திற்குச் சொந்தமான துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, வடகிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது, அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. கடந்த 19 வருடங்களாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் முயற்சிகளை மேம்படுத்துவதோடு, நாடு முழுவதிலும் உள்ள தனிப்பட்ட நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நிறுவனம் பங்களித்துள்ளது.
புதிய கிளையுடன் தொடர்பு கொள்ள 065-7605635 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும் அல்லது வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள அலுவலகத்துக்கு விஜயம் செய்யவும். சியபத பினான்ஸ் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐப் பார்வையிடவும்.





































Discussion about this post