ஹோமாகம கிளையை திறப்பதன் மூலம் சியபத பினான்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது
சம்பத் வங்க் பிஎல்சியின் முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலக்கம் 134 ஸ்டேஷன் வீதி, ஹோமாகம இல் அமைந்துள்ள அதன் 53வது கிளையை வைபவ ரீதியாக அண்மையில் திறந்து வைத்தது. இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் தற்போதைய பணியில் மற்றொரு மைல்கல்லாக இந்த மாபெரும் திறப்பு விழா அமைந்தது. இந்நிகழ்வில் சியபத பினான்ஸின் முகாமைத்துவ பணிப்பாளர், திரு.ஆனந்த செனவிரத்ன, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு.ரஜீவ் டி சில்வா, ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், உள்ளூராட்சி அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுடன், ASP – ஹோமாகம, திரு. ஹசங்க ரந்திக வெதமுல்ல, பதில் OIC- ஹோமாகம, திரு. பிரியஷாந்த, வர்த்தக சங்கத்தின் தலைவர், மாகம்மன மகா வித்தியாலய அதிபர் திருமதி கே பத்மலதா, ஆகியோர் கலந்துகொண்டடதுடன் பிரதேசத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களும் பங்குகொண்டன.
ஹோமாகம கிளையானது குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்குகள், தங்க நிதியளிப்பு, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு சேவைகள், காரணியாக்கம் மற்றும் Smart Pay தானியங்கு பில் செலுத்தும் வசதி போன்ற பல்வேறு வகையான நிதித் தயாரிப்புகளை வழங்குகிறது. ஹோமாகம பகுதியில் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்கள், உள்;ர் சமூகத்தின் நிதி அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கின்றன.
ஏறக்குறைய 137 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும், இலங்கையில் உள்ள பிரதேச சபைகளினுள் அதிக மக்கள்தொகையைக் கொண்ட ஹோமாகம, வேகமாக வளர்ந்துவரும் நகரமாகவும் பொருளாதார ரீதியாக ஆற்றல்மிக்க பிரதேசமாகவும் திகழ்கின்றது. இப்பகுதியானது ஆடைகள், மோட்டார் வாகனங்கள், சொத்து மேம்பாடு மற்றும் வாடகை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வணிகங்களினால் வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), அத்துடன் பெரிய நிறுவனங்கள், ஹோமாகமவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைகின்றன.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன கிளை திறப்பு பற்றி கூறுகையில் “கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாலும், வசதியாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டதாலும், ஹோமாகம பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. கொழும்புக்கு அருகாமையில் இருப்பதும் செயலில் உள்ள நிறுவனங்களுக்கும் வளர்ந்து வரும் வணிகங்களுக்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகிறது. சியபத பினான்ஸின் இந்தப் பகுதியின் விரிவாக்கமானது, உள்ளூர் தொழில்முனைவோர், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, பிராந்தியத்தின் பரந்த பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குகிறது,” என தெரிவித்தார். மேலும் கூறுகையில் இ “இந்தப் புதிய கிளையைத் திறப்பதன் மூலம், உள்ளூர் வணிகங்கள் மற்றும் தனிநபர்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் சௌகரியமான நிதிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் என்று நம்புகிறோம். குறிப்பாக, ஹோமாகமவின் சனத்தொகையில் சுமார் 51% பெண்களாக இருப்பதால், சியபத பினான்ஸ், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவுவதுடன், தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கத் தயாராக உள்ளது, ”என அவர் மேலும் விவரித்தார்.
சமூகப் பொறுப்புணர்வுக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, சியபத பினான்ஸ் பிஎல்சி ஹோமாகமவில் தனது “சியபதென் மிஹிகதட” முயற்சியையும் ஆரம்பித்தது. கிளை திறப்புடன், நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகக் குழு மரம் நடும் திட்டத்தில் பங்கேற்று, உள்ளூர் பாடசாலைக்கு கணினிகள் மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.
2005 இல் ஸ்தாபிக்கப்பட்டு இலங்கை மத்திய வங்கியால் (CBSL) நெறிப்படுத்தப்பட்ட சியபத பினான்ஸ், சிறந்த லீசிங் நிறுவனமாக நற்பெயரைப் பெற்றுள்ளதுடன், சிறந்து விளங்கும் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளுக்கான அதன் அர்ப்பணிப்புக்காகப் புகழ் பெற்றுள்ளது. 950 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களைக் கொண்ட அர்ப்பணிப்புள்ள குழுவுடன், நிறுவனம் முக்கிய நகர்ப்புற மையங்கள் மற்றும் நகரங்களில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள 52 கிளைகளை உள்ளடக்கியதாக அதன் தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்ட நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, விரைவில் சம்பத் வங்கியின் மிகப்பெரிய துணை நிறுவனமாக உருவெடுத்தது. அதன் மாறுபட்ட செயற்திறன் காரணமாக நிதி குத்தகை, கடன்கள், தங்க நிதியுதவி, விரைவான வரைவுகள், காரணியாக்கம் (கடன் நிதியளித்தல்) மற்றும் ஏனைய நிதி சேவைகளின் வரிசையை உள்ளடக்கி தனது தடத்தை விரிவாக்கியது. Fitch Ratings ஆனது, Siyapatha Finance இன் தேசிய நீண்ட கால மதிப்பீட்டை BBB+ (lka) இல் நிலையான வெளிப்பாட்டுடன்; உறுதி செய்துள்ளது, இது நிறுவனத்தின் உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சிப் பாதைக்கு வழிவகுத்துள்ளது.
K Seeds Investments (Pvt) Ltd ஆல் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய விரிவான நிதிப் பகுப்பாய்வில், 2024 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களில் சியபத பினான்ஸ் பிஎல்சி “சிறந்த செயல்திறன் கொண்ட நிதி நிறுவனமாக” தரவரிசை வகை 2 இல் தரப்படுத்தப்பட்டது.
மேலும், சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் முடிவடைந்த 2024 ஆம் ஆண்டு இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகளில் “சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமமாக” கௌரவிக்கப்பட்டது. உலக மனித வள மேம்பாட்டு காங்கிரஸ் மற்றும் தொழில்துறை விருதுகள் குழுவின் நட்சத்திரங்களுடன் இணைந்து இந்தியாவின் தொழில்தருநர் வர்த்தக நாம நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. மனித வளங்கள் மற்றும் அதன் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் இலங்கை வர்த்தக நாமங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலதிக தகவல்களுக்கு, சியபத பினான்ஸ் 134, ஸ்டேஷன் வீதி, ஹோமாகம என்ற முகவரியில் அல்லது 117605535 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் அல்லது www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.





































Discussion about this post