SLIIT நிறுவனம் இயந்திரப் பொறியியல் பட்டத்தில் IESL இன் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம் இலங்கையின் கல்வி மட்டம் உயர்த்தப்படுகின்றது
SLIIT இன் இயந்திரப் பொறியியல் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் மிகார லியனகே உடனான நேர்காணல்
SLIIT நிறுவனத்தின் இயந்திரப் பொறியியல் பட்டம் இலங்கை பொறியியல் நிறுவனத்தின் (IESL) நிபந்தனை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவுசெய்துள்ளது. இந்தப் பட்டத்தைப் பெறும் மாணவர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு அவசியமான அங்கீகாரத்துக்கான முதல் படியாக இது அமைந்துள்ளது.
இந்தச் சாதனையின் முக்கியத்துவம், IESL இனுடைய தரநிலையை அடைவதில் தாக்கம் செலுத்திய முக்கிய காரணிகள், ஏனைய நிறுவனங்களுக்கு அப்பால்பட்டதாகக் காணப்படும் SLIIT இன் இயந்திரப் பொறியியல் நிகழ்ச்சித்திட்டத்தின் தனித்துவமான அம்சங்கள் குறித்து SLIIT இன் இயந்திரவியல் துறையின் தலைவர் பேராசிரியர் மிகார லியனகே விரிவாக விளக்கமளித்தார்.
கேள்வி : இன் இயந்திரப் பொறியியல் பட்டக் கல்வித்திட்டம் இலங்கை பொறியியல் நிறுவனத்தின் (IESL) நிபந்தனை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட பாதையை முதலில் விளக்க முடியுமா?
பதில் : 2013ஆம் ஆண்டு பொறியியல் பட்டக்கல்வித் திட்டங்களை ஆரம்பித்ததுடன், இயந்திரப் பொறியியல் திணைக்களத்தின் ஆரம்பம் என்பன இதில் உள்ளடங்குகின்றன. நாம் வழங்கும் இந்தப் பட்டக் கல்வித்திட்டங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது. முதலாவது தொகுதி பொறியியல் பட்டதாரி மாணவர்கள் 2017ஆம் ஆண்டு பட்டத்தைப் பெற்றனர். எமது இயந்திரப் பொறியியல் பட்டப் பாடத்திட்டத்துக்குக் கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க இந்த வெற்றியின் ஊடாக, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான தொகுதி மானவர்களுக்கு இலங்கை பொறியியல் நிறுவனத்தின் நிபந்தனை அங்கீகாரம் கிட்டியுள்ளது.
கேள்வி : இந்தப் பட்டப் பாடதிட்டத்துக்கு உள்வாங்கப்படுவதால் SLIIT மற்றும் மாணவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் என்ன?
பதில் : நிபந்தனை அங்கீகாரம் என்பது எமக்குப் பாரியதொரு வெற்றியாகும். வொஷிங்டன் ஒப்பந்தத்துக்கு அமைய இலங்கை பொறியியல் நிறுவனத்தின் முழுமையான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இது ஆரம்பப் படியாகும். பட்டதாரிகள்-மட்ட பொறியியல் பட்டங்களை வழங்குவதற்கான அனுமதி மற்றும் அங்கீகாரத்தை வழங்கும் சர்வதேச நிறுவனங்கள் அல்லது பொறுப்பான நிறுவனங்களுக்கிடையிலான பலதரப்பு ஒப்பந்தமே வொஷிங்டன் ஒப்பந்தமாகும். இ;வ்வாறான நிலையில் அங்கீகாரத்தைப் பெறுதல் என்பது எமது இயந்திரவியல் பொறியியலின் தரத்தை ஊர்ஜிதம் செய்வது மாத்திரமன்றி முழுமையான அனுமதியைப் பெறுவதற்கான வழியாகவும் அமைகின்றது.
கேள்வி : இந்த அங்கீகாரம் மாணவர்களுக்கு எவ்வாறு நன்மையளிக்கும்?
பதில் : இந்த அங்கீகாரத்தைப் பெறுவதன் ஊடாகக் கிடைக்கும் நேரடியான நன்மை என்னவெனில், தற்போதைய ஒருங்குவிதிகளுக்கு அமைய இயந்திரவியல் பொறியியலில் பட்டம்பெறும் அனைவரும் கட்டாயமாக இலங்கைப் பொறியியல் நிறுவனத்தின் இணை உறுப்பினர்களான இணைந்துகொள்ள வேண்டும். எமது பட்டப்பாடநெறிக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தின் அடிப்படையில் இந்த இரண்டு தொகுதி மாணவர்களும் நேரடியாக இணை உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வர். இது எமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமையும் என்பதுடன், துறைசார் ரீதியான பயிற்சிகளுக்கு இது அவர்களை வழிப்படுத்தும்.
கேள்வி : இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு பங்களித்த முக்கிய விடயங்கள் என நீங்கள் எவற்றைக் கருதுகின்றீர்கள்?
பதில் : நிபந்தனை அங்கீகாரத்தைப் பெறுவதில் நாம் அடைந்திருக்கும் வெற்றிக்குப் பல்வேறு காரணிகள் பங்களித்துள்ளன. SLIIT ஆனது எப்பொழுதும் தனது பட்டப் பாடத்திட்டங்களின் தரத்துக்காக அர்ப்பணிப்பைத் தொடர்ந்தும் பேணி வருகின்றது. உலகளாவிய தரநிலைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட தரத்தில உயர்ந்த சமகாலத்துக்கு ஏற்ற பாடத்திட்டங்களை நாம் வழங்குகின்றோம். இது ஏனைய உள்நாட்டு மற்றும் சர்வதேச பட்டப்பாடத்திட்டங்களுக்கு அளவுகோலாக அமைகின்றது. மாணவர்கள் சிறந்த கற்றல் அனுபவத்தைப் பெறுகின்றமையை நாம் உறுதிப்படுத்துகின்றோம். சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் போக்குகளுக்கு இணையாக இருக்கும் வகையில் எமது பட்டப்பாடத் திட்டங்களை நாம் தொடர்ச்சியாக மேம்படுத்துகின்றோம்.
கேள்வி : ஏனைய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை இடமிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கும் பட்டப்பாடத்திட்டத்தின் தனித்துவமான அம்சங்கள் யாவை?
பதில் : பல்வேறு தனித்துவமான அம்சங்கள் SLIIT இல் வழங்கப்படும் கல்வித் திட்டங்களை ஏனைய நிறுவனங்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன. தேவையான தரநிலையை அடைவதற்கான பிந்திய பாடநெறிகளை நாம் வழங்குகின்றோம். அவை உலகின் ஏனைய பகுதிகளில் வழங்கப்படும் திட்டங்களுடன் ஒப்பிடக்கூடியவை. மற்றுமொரு தனித்துவமான அம்சம் எமது பணியாளர்களாகும். எமது பீடமானது இலங்கையில் சிறந்த அனுபவம் கொண்ட மற்றும் அறிவுமிக்க பணியாளர்களைக் கொண்டதாகும். அவர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அனுபவத்தைக் கொடுக்கின்றனர். மாணவர்களின் நடைமுறை ரீதியான கற்றல் மற்றும் திறன் வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கில் அதிவீன ஆய்வுகூடங்களில் நாம் முதலீடுகளைச் செய்துள்ளோம். திறமையான பணியாளர்கள், புதுமை நிறைந்த பாடநெறி, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வுகூடம் என்பன இதற்குக் காரணியாக அமைகின்றன. இந்த தனித்துவத்தைப் பேணுவதற்கு நாம் கடுமையாக உழைக்கின்றோம்.
கேள்வி : இந்த அங்கீகாரம் SLIIT பட்டதாரிகளக்கு தொழில்ரீதியாக எவ்வாறு நன்மை அளிக்கும்?
பதில் : இலங்கையில் புதிய பொறியியல் சங்கம் உருவாக்கப்பட்டதைத் தொடர்;ந்து பொறியியலாளர்களாகப் பயிற்சி எடுப்பதற்கு குறித்த சங்கத்தில் பதிவுகளை மேற்கொள்வது கட்டாயமானதாகும். பயிற்சியெடுக்கும் அனைத்துப் பொறியியலாளர்களும் இலங்கை பொறியியல் நிறுவனத்திடமிருந்து உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதன் ஊடாக எமது இயந்திரவியல் பொறியல் பட்டதாரிகள் அனைவரும் தானாகவே இந்த சங்கத்தில் இணை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளப்படுவர். இது இறுதியில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறும் போது பட்டய பொறியாளர்களாக மாற உதவும்.
கேள்வி : அவர்களின் வேலைவாய்ப்புக்களை இது எவ்வாறு மேம்படுத்தும்?
பதில் : SLIIT இல் இயந்திரப் பொறியியல் பட்டத்தைப் பூர்த்தி செய்தால் பரந்துபட்ட வாய்ப்புக்கான ஆரம்பம் கிடைக்கும். பொறியியல் துறையில் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப இது அடித்தளமாக அமையும். இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்றவர்கள் தொழில்துறை, கல்வியியலாளர் அல்லது தொழில்முனைவர்களாக வாழ்க்கைப் பாதையைத் தெரிவுசெய்யலாம். தொழில்துறையில் இணைந்துகொண்டால் பொறியியலாளராகப் பணியாற்ற முடியும். கல்வித்துறையில் இணைய விரும்புபவர்கள் விரிவுரையாளர்களாக அல்லது ஆய்வாளர்களாகப் பணியைத் தொடரலாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறும்போது, உயர் படிப்புகளுடன் கூடுதல் தகுதிகளைப் பெற வேண்டியிருக்கும். இந்தப் பட்டம் மாணவர்களுக்கு உயர் படிப்புக்கான அடிப்படைத் தகுதியையும் வழங்கும். இதன் மூலம் ஒருவர் முதுகலைப் பாடத்திட்டத்தில் இணையலாம்.
கேள்வி : பாடநெறியின் அடிப்படையில் SLIIT இயந்திரப் பொறியியல் எதனை வழங்குகின்றது?
பதில் : இயந்திரப் பொறியியல் பட்டம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளது. நாங்கள் எங்கள் பாடத்திட்டத்தை இலங்கைப் பொறியியல் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஒழுகும் வகையில் சீரமைத்துள்ளோம். SLIIT தற்போது பொதுவான இயந்திரப் பொறியியல் பட்டம் மற்றும் மெகாட்ரொனிக் துறையில் விசேட பட்டம் என்பவற்றை வழங்குகின்றது. பாடத்திட்டத்தின் முதலாவது வருடம் பொதுவானதாக இருக்கும். முதலாவது வருடத்தில் மாணவர்கள் பொறியியலின் அடிப்படையைக் கற்றுக்கொள்வர். இரண்டாவது வருடத்தில் பொதுவான இயந்திரப் பொறியியல் பற்றிக் கற்பார்கள். மூன்றாவது வருடத்தில் முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஆகிய பட்டங்களுடன் இணைந்து தொடர்ந்தும் பொறியியலைக் கற்பார்கள். நான்காவது மற்றும் இறுதி வருடத்தில், நிஜஉலகப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களைத் தயாரிப்பதில் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்துவர். நடைமுறை ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தாம் பெற்ற அறிவை அவர்கள் பயன்படுத்துவர். மாணவர்களுக்குத் தாங்கள் மேலும் நிபுணத்துவம் பெற விரும்பும் துறையில் தங்களின் விருப்பத்திற்கு அமைய தெரிவுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடங்களின் பின்னர் மாணவர்கள் கட்டாய தொழிற்பயிற்சிக்கு உள்ளாக வேண்டும். இந்தத் தொழில்துறைப் பயிற்சியில் நிஜ உலகப் பொறியியல் சூழல் குறித்த முழுமையான அனுபவத்தைப் பெற்றுக்கொள்வர்.
கேள்வி : எதிர்காலத்தில் SLIIT இல் சேரும் மாணவர்கள் இயந்திரப் பொறியியில் திட்டத்தில் இணைவதாயின் கருத்தில் கொள்ளவேண்டிய கட்டாய காரணங்கள் என்ன?
பதில் : இன்றைய காலகட்டத்தில் இயந்திரப் பொறியியல் கேள்வி மிக்க துறையாகும். இலங்கையிலும், வெளிநாடுகளிலும் இத்துறையின் வேலைக்கான வாய்ப்புக்கள் அதிகம். கடந்த காலத்தில் வேலைவாய்ப்பில் நாம் சிறப்பைப் பேணிவந்தோம். நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதிச் சந்தையை விரிவுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இயந்திரப் பொறியியலாளர்களால் முக்கிய பங்காற்ற முடியும். பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஆண்டுகளில், நாட்டிற்கு அதிகமான இயந்திர பொறியாளர்கள் தேவைப்படும். எங்கள் பாடத்திட்டம் உள்ளாட்டு மற்றும் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளடன், பட்டதாரிகள் துறையின் தேவைக்கு ஏற்ற வகையில் தயாராக இருப்பதை இது உறுதி செய்கின்றது. SLIIT இன் கல்விசார் பணியாளர்கள் விரிவான அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டிருப்பதுடன், மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணம் முழுவதும் விலைமதிப்பற்ற வழிகாட்டல் மற்றும் வழிகாட்டுதலை வழங்குகின்றது. அதிநவீன வசதிககை; கொண்ட ஆய்வுமூடம் கற்றல் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றது. மாணவர்கள் பாடத்திட்டத்தின் போது பல திட்டங்களில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கு நேரடி அனுபவத்தையும், நிஜ வாழ்க்கை பிரச்சனைகளில் தத்துவார்த்த கருத்துகளின் நடைமுறை பயன்பாட்டையும் வழங்குகிறார்கள்.
கேள்வி : SLIIT இன் ஆய்வுக் கலாசாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியுமா?
பதில் : துடிப்பானதொரு ஆய்வுக் கலாசாரத்தை நிறுவுவதற்காக சமீப காலங்களில் SLIIT கடினமாக உழைத்து வருகிறது. ஆய்வில் ஈடுபடுவதன் ஊடாக சமூகத்தில் காணப்படும் நிஜ உலக வாழ்க்கைப் பிரச்சினைக்கு மாணவர்கள் புதிய தீர்வுகளைத் தேடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். தரமான ஆய்வுகள் நன்மதிப்புக்களைப் பெற்ற ஆய்வுப் பதிப்புகளினால் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். கடந்த மாதத்தில் எமது இரண்டு PhD பட்டதாரிகள் தமது பட்டத்தைப் பூர்த்திசெய்திருந்தனர். கடந்த காலத்தில் எமது திணைக்களம் ஐக்கிய இராச்சியத்தின் பென்ட்லி மோட்டேர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தது. நாம் தற்பொழுது இறுதி ஆண்டு மாணவர்களின் ஒப்படைகளுக்காக பல்வேறு கம்பனிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். எதிர்காலத்தில் MPhil ற்றும் PhD பட்டங்களுக்கு வழிவகுக்கும் வகையிலான பட்டப்பின்படிப்பு ஆய்வுகள் வரை விஸ்தரிக்கவுள்ளோம்.
கேள்வி : எதிர்காலத்தை நோக்கும்போது தற்பொழுது கிடைத்துள்ள அங்கீகாரத்தையடுத்து என்ன கட்டம்?
பதில் : அடுத்து எமது குறிக்கோள் பட்டப்படாத் திட்டத்துக்கு முழுமையான அங்கீகாரத்தைப் பெறுவதாகும். தொடர்ந்தும் எமது பாடத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு கடுமையாக உழைக்கின்றோம். வளர்ந்து வரும் பகுதிகளை அறிமுகப்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். உதாரணமாக, இயந்திர பொறியியலில் செயற்கை நுண்ணறிவின்; பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. பணிபுரியும் வல்லுநர்கள் மற்றும் சமீபத்திய பட்டதாரிகளுக்கு தொழில்துறை 4.0 இல் முதுமானித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக நாம் பணியாற்றி வருகின்றோம். ஆய்வுகளை விஸ்தரிக்கவும் நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். திணைக்களம் தனது இலக்கை நோக்கிச் செல்வதற்கு இந்த பட்டப்படாத்திட்டம் ஒத்துழைப்பு வழங்கும். தொழில்துறை மற்றும் பிற நிறுவனங்களுடனான எங்கள் தொடர்புகளை மேம்படுத்துவதையும் நாங்கள் மேம்படுத்திவருகின்றோம். தொழில் ரீதியாக அனுசரi வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் ஆய்வுத் திட்டங்களில் ஈடுபடுவது இரு தரப்பினருக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கும்.





































Discussion about this post