பொறியியல் துறையில் பெண்களை வலுப்படுத்தல் : SLIIT இன் பொறியியல் பீடத்தில் கலாநிதி.கயஷிகா பெர்னான்டோவின் PhD பயணம்
கலாநிதி.கயஷிகா பெர்னான்டோ SLIIT இன் பொறியியல் பீடத்தில் இயந்திரப் பொறியியல் திணைக்களத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். SLIIT இன் பொறியியல் பீடத்தினால் உருவாக்கப்படும் முதலாவது PhD பட்டம் பெற்றவர் என்ற ரீதியில், அவர் தனது குறிப்பிடத்தக்க பயணத்தின் ஊடாக உறுதிப்பாடு, பதிலிறுப்பு மற்றும் விஞ்ஞான அறிவை மேம்படுத்துதல் போன்றவற்றில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்குகின்றார்.
கலாநிதி.பெர்னான்டோ தயாரிப்பு பொறியியலில் B.Sc. (Hons) பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டிருப்பதுடன், உற்பத்தி முறை பொறியியலில் MEng பட்டத்தை மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டுள்ளார். SLIIT இல் இணைந்துகொள்வதற்கு முன்னர் 8 வருடங்கள் தொழில்துறையில் சேவையாற்றியிருந்தார்.
“காலநிலை தணிப்பு மற்றும் கார்பன் நடுநிலைமைக்கான காலநிலை கொள்கைப் பகுப்பாய்வு : இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு” என்ற தலைப்பில் கலாநிதி.பெர்னான்டோ மேற்கொண்ட ஆய்வு, பல்வேறு எரிசக்திக் கொள்கைகளினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை ஆய்வு செய்வதாக அமைந்தது. புதுப்பிக்கத்தக்க சக்தி இலக்குகள், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு மற்றும் புகைவெளியேற்றத்தை முற்றாக நீக்குதல் போன்ற விடயங்களில் தேசிய அளவிலான கொள்கைகளைத் தயாரிப்பதற்கு இந்த மாதிரிகள் பயனள்ளதாக அமையும். அவ்வாறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதான செலவுகள் மீதும் இது தாக்கத்தைச் செலுத்தும். இவருடைய இந்த ஆய்வுகள் Q1 ஆய்விதழில் பிரசுரிக்கப்பட்டதுடன், இது சர்வதேச அங்கீகாரம் மற்றும் கல்விக்கான கேந்திரநிலையமாக சிறந்த விளக்கும் SLIIT இன் நற்பெயருக்கு பலமாகவும் அமைந்துள்ளது.
ஆய்வில் நுணுக்கங்கள், பொறியியல் துறையில் பெண் என்ற ரீதியில் தான் எதிர்கொண்ட சவால்கள், இந்தத் துறையில் செல்வதற்கு உத்வேகமாக இருந்த விடயங்கள் மற்றும் இத்துறையை வாழ்க்கையின் பாதையாக்க நினைப்பவர்களுக்கு வழங்கும் பெறுமதியான ஆலோசனைகள் பற்றி கலாநிதி. பெர்னான்டோ பகிர்ந்துகொண்ட விடயங்கள் வருமாறு,
கேள்வி : இந்த ஆய்வு மற்றும் கல்வியின் சாதனைகள் பற்றி விளக்க முடியுமா?
பதில் : எரிசக்தி-பொருளாதார முறைமையைப் பயன்படுத்தி “காலநிலை தணிப்பு மற்றும் கார்பன் நடுநிலைமைக்கான காலநிலை கொள்கைப் பகுப்பாய்வு” என்ற விடயத்தை இலக்காகக் கொண்டு SLIIT இல் இயந்திரப் பொறியியலில் நான் PhD பட்டத்தைப் பெற்றுள்ளேன். பல்வேறுபட்ட காலநிலை மற்றும் எரிசக்தி கொள்கைகளை ஆராய்ந்து மாதிரியொன்றை உருவாக்குவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். கொள்கையை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கு முன் அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் ஒரு முறையான வழிமுறையை நாடு கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துரைக்கின்றது. நாட்டுக்கான எதிர்காலத் தேசிய கொள்கைகளைத் தயாரிக்கும்போது இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதா இருக்கும். பரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றத்தில் ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு சமவாயம் (UNFCCC) போன்ற ஒப்பந்தங்களின் கீழான சட்டப்பிணைப்புக்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை இது வழங்கும்.
எனது முதன்மை மேற்பார்வையாளர் பேராசிரியர் மிகர லியனகே ஆகும். இணை மேற்பார்வையாளர்களாக பேராசிரியர் ஆர்.ஏ.அத்தலகே மற்றும் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன ஆகியோர் செயற்பட்டனர். எனது இந்த PhD பட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்வதற்கு அவர்களின் பெறுமதிமிக்க உள்ளீடுகள் மற்றும் சிறந்த ஒத்துழைப்பு, ஊக்கப்படுத்தல் பெரும் பங்காற்றியது. மிகவும் வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் தகவல்களைக் கொண்ட இலங்கை போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் உயர் தரத்திலான ஆய்வை மேற்கொள்வது நடைமுறையில் கடினமானதாகும். இருந்தபோதும், அனுபவம் மிக்க மேற்பார்வையாளர்கள், சர்வதேச நிபுணர்களின் ஒருங்கிணைப்பு, SLIIT இன் ஆய்வு வசதிகள் என்பன இந்தத் தடைகளைத் தாண்டி எனது இலங்கை அடைவதற்கு மிகவும் உறுதுணையாக அமைந்தன. ஜப்பானின் சூழலியல் கற்கைகளுக்கான தேசிய நிறுவகத்தின் ஒத்துழைப்பைப் பெறும் அதிஷ்டமும் எனக்குக் கிடைத்தது. இவ்வாறான ஒத்துழைப்புக்கள் தரமான ஆய்வொன்றை முன்வைப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தன.
இந்த ஆய்வானது உலகாளாவிய ரீதியில் முதல் 10% உயர்ந்த ஆய்விதழ்களில் காணப்படும் ‘நிலைபேறான உற்பத்தி மற்றும் நுகர்வு’ ஆய்விதழ் உட்பட சிறந்த ஆய்விதழ்களான Q1 ஆய்விதழ்களில் இது பிரசுரமாகியுள்ளது. SLIIT இன் பொறியியல் பீடத்தினுடைய முதலாவது PhD பட்டதாரியாகவதில் நான் பெருமையடைவதுடன், SLIIT இல் பொறியியல் துறையில் முதுமானி கலாசாரத்தை வளர்ப்பதில் எனது பங்களிப்பு, நிறுவனத்திற்குள்ளும் நாடு முழுவதிலும் பரந்த ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் நான் பங்களிப்புச் செலுத்துவேன்.
கேள்வி : பொறியியல் துறையில் தொழிலைத் தொடர்வதற்கு ஏன் விரும்பினீர்கள், SLIIT இல் PhD ஐ பூர்த்தி செய்ய உங்களைத் தூண்டியது எது?
பதில் : கோப்ரேட் துறையில் 8 வருடங்கள் பணியாற்றிய பின்னர், கோப்ரேட் துறையின் எனது அனுபவங்களைச் சேர்ப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினரை வடிவமைக்கவும் மேலும் தாக்கமான பங்களிப்பை வழங்குவதன் ஊடாக எதிர்கால பொறியியல் கல்வியை வளமாக்க முடியும் என நான் கருதினேன். இதனால் தான் கல்வித் துறையில் செயற்படவும், SLIIT இல் இணைந்து கொள்ளவும் நான் தீர்மானித்தேன். தொடர்ச்சியாக எனது அறிவை மேம்படுத்துவதன் அவசியத்தை அடையாளம் கண்டதன் ஊடாக, PhD பட்டத்தை தொடர்வதற்கு நான் முடிவு செய்தேன். நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுத்த தனிப்பட்ட காரணங்களின் காரணமாக PhD பட்டத்தை SLIIT இல் பெறுவதற்கு நான் தீர்மானித்தேன். நிபுணத்துவ வழிகாட்டுதல், ஆய்வுக்கான மானிகங்கள், விதிவிலக்கான நூலக வளங்கள் மற்றும் கற்பதற்கான விடுமுறைகள் உள்ளிட்ட நிறுவனம் வழங்கிய முழுமையான ஒத்துழைப்புச் சூழல் எனது PhD பட்டத்தை வெற்றிகரமாகப்பு பூர்த்தி செய்ய உறுதுணையாக இருந்தன.
கேள்வி : பொறியியல் துறையைப் பின்தொடர்வில் பெண் என்ற ரீதியில் நீங்கள் எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்தீர்கள்?
பதில் : ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் துறையாகப் பொறியியல் துறை காணப்படுகின்றபோதும், இதில் பெண்களுக்குப் பொருந்தக் கூடிய பல வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. பதிலாற்றல் மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நான் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதுடன், ஒவ்வொரு வாய்ப்பையும் என்னை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டேன். எனது இலக்குகளை அடைய நான் படிப்படியாக நீடித்த நடவடிக்கைகளை எடுத்தேன். சரியான நேர முகாமைத்துவம் மற்றும் சிறந்த உடல், மன நடைமுறைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையையும் வேலையையும் சமநிலைப்படுத்தினால் சகல துறைகளிலும் காணப்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும்.
கேள்வி : பொறியியல் துறையில் பெண்களின் பங்களிப்பு ஏன் முக்கியமானது என நீங்கள் கருதுகின்றீர்கள் ?
பதில் : மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வடிவமைப்பதே பொறியியலாகும். புதுமையான தீர்வுகளை வடிவமைக்கும்போது பல்வேறு கண்ணோட்டங்களையும் அனுபவங்களையும் கொண்டு வருவதால், பொறியியலில் பெண்களின் பங்கேற்பு முக்கியமானது. சகிப்புத்தன்மை, பல்வேறு இலக்குகளை அடையக்கூடிய திறன், சிறந்த குழு ஒருங்கிணைப்புத் திறன்கள், சிறந்த தகவல் தொடர்புத் திறன்கள் மற்றும் தனிப்பட்ட திறமைகள் போன்ற தனித்துவமான பெண்களின் பண்புகளால் குழுக்களை மேம்படுத்தி பொறியியல் துறைக்கு கணிசமான மதிப்புக் கொண்டுவரப்படுகின்றது. அவர்களின் தனித்துவமான கண்ணோட்டத்துடன், இந்தத் துறையில் உள்ள பெண்கள் நேரடியாக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதுடன், சமூக மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்தையும் நிவர்த்தி செய்கிறார்கள். மேலும், பொறியியல் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக உள்ள நாடுகளில், பொறியியலில் அவர்களின் ஈடுபாடு சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. உள்ளடக்கிய சூழலை வளர்ப்பதன் மூலம், பொறியியல் துறைகள் பெண்களின் பங்களிப்புகளின் மகத்தான திறனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கேள்வி : பொறியியல் துறையை தமது வாழ்க்கைக்கான துறையாகக் கருதும் பெண்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை யாது, இதற்கு SLIIT ஏன் சிறந்த தெரிவாகும்?
பதில் : பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக நலனுக்குத் தேவையான பல்வேறு விதமான கண்ணோட்டங்களையும், பொறியியல் தீர்வுக்கான அனுபவங்களையும் பெண்களால் உண்மையில் வழங்க முடியும் என நான் நம்புகின்றேன். உங்களைப் பற்றி நீங்களே நம்பிக்கை கொள்வதும், பொறியியல்துறைக்கு தனித்துவமான கண்ணோட்டத்தைக் கொண்டு வருவதே பிரதானமானது. உங்களின் தொழில்வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய வழிகாட்டி ஒருவரைத் தேடிக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கை முழுவதும் நீடிக்கக் கூடிய கற்றல் அனுபவம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களைத் தொடர்ந்தும் தேடவும்.
பொறியியல்துறையைக் கற்பதற்கு SLIIT சிறந்த தெரிவாக இருக்கும் என்பதை பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நான் பரிந்துரைக்கின்றேன். குறிப்பாக நெகிழ்வுப் போக்குடைய அதன் அணுகுமுறை, சுய நிதியளிக்கப்பட்ட ஆய்வு மானியங்கள், பணியாளர்களுக்கு கட்டணத் தள்ளுபடிகள், சிறந்த வசதிகள் மற்றும் ஆய்வுகள் மூலம் ஊக்கப்படுத்தும் பணியாளர்கள் இதில் முக்கியமானவையாகும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுடனான SLIIT இன் ஒத்துழைப்பு மதிப்புமிக்க ஆதரவையும் வெளிப்பாட்டையும் வழங்குகின்றது. இந்த வெற்றியை அடைவதற்கு எனது மேற்பார்வையாளர்கள் மற்றும் சக பணியாளர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கு நான் நன்றியுடையவராக இருக்கின்றேன்.
கல்வி ரீதியான சாதனைகளுக்கு அப்பால், கலாநிதி.பெர்னான்டோவின் சாதனைகள் பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் தொழிலைத் தொடர விரும்பும் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மற்றும் தரவு கிடைப்பதால் ஏற்படும் சவால்களை, அனுபவம் வாய்ந்த மேற்பார்வையாளர்களின் ஆதரவுடனும் சர்வதேச நிபுணர்களுடனான ஒத்துழைப்புடனும் அவர் வெற்றிகொண்டுள்ளார்.






































Discussion about this post